Lattes News And Images And Video Live

Wednesday 31 July 2013

மன்மோகன்சிங் வருகையையொட்டி திருச்சி ஏர்போர்ட்டில் பாதுகாப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஓலைக்குடி பட்டியில் 57 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் பெல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பெல் பவர் பிளான்ட் பைப்பிங் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா வருகிற 2–ந் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்காக தனி விமானத்தில் திருச்சி மன்மோகன்சிங் வருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் திருமயத்திற்கு செல்லும் மன்மோகன் சிங் நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் ஹெலிகாப்டரில் திருச்சி வந்து தனி விமானத்தில் டெல்லிக்கு செல்கிறார்.

இதையொட்டி திருச்சி விமான நிலையத்தில் உச்ச கட்ட பாதுகாப்பான ரெட் அலெர்ட்–க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 2–ந் தேதி அன்று பிரதமரின் தனி விமானம் புறப்பட்டு செல்லும் வரை எந்த வாகனங்களையும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.

பிரதமரின் பாதுகாப்பு பிரிவு ஏ.ஐ.ஜி.விராஹித் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு திருச்சி வந்தனர். அந்த குழுவினர் இன்று திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
Posts RSSComments RSSBack to top
© 2011 VADAKADU.IN ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0