புதுக்கோட்டை மாவட்டம்
திருமயம் அருகே ஓலைக்குடி பட்டியில் 57 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி
செலவில் பெல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பெல் பவர் பிளான்ட் பைப்பிங்
யூனிட் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்
தொடக்க விழா வருகிற 2–ந் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்
கலந்து கொண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து
கொள்வற்காக தனி விமானத்தில் திருச்சி மன்மோகன்சிங் வருகிறார். பின்னர்
ஹெலிகாப்டரில் திருமயத்திற்கு செல்லும் மன்மோகன் சிங் நிகழ்ச்சி முடிந்த
பின்னர் மீண்டும் ஹெலிகாப்டரில் திருச்சி வந்து தனி விமானத்தில் டெல்லிக்கு
செல்கிறார்.
இதையொட்டி
திருச்சி விமான நிலையத்தில் உச்ச கட்ட பாதுகாப்பான ரெட் அலெர்ட்–க்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 2–ந் தேதி அன்று பிரதமரின் தனி விமானம்
புறப்பட்டு செல்லும் வரை எந்த வாகனங்களையும் விமான நிலையத்திற்குள்
அனுமதிக்கக்கூடாது என பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
பிரதமரின்
பாதுகாப்பு பிரிவு ஏ.ஐ.ஜி.விராஹித் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு
திருச்சி வந்தனர். அந்த குழுவினர் இன்று திருச்சி விமான நிலையத்தில்
பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு
மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments