கீரமங்கலம்
முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. காய்
கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து
இழுத்தனர்.
புதுக்கோட்டை
மாவட்டம் கீரமங்கலத்தில் எழுந்தருளியுள்ள கிராம காவல் தெய்வமான முத்துமாரி
யம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கி
நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினசரி அம்மன் சிறப்பு
அலங்காரங்களுடன் வானவேடிக்கைகள், மங்கள இசைகள் முழங்க பெண்களின்
ஆரத்தியுடன் அலங்கார வாகனத்தில் வீதியுலாவும் இரவு கலை நிகழ்ச்சிகளும்
நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள்
பால்குடங்கள் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சிகளும் நடந்து
வருகிறது.
திருவிழாவை
முன்னிட்டு தினசரி அன்னதான நிகழ்ச்சிகளும் விழா குழு சார்பில்
நடத்தப்பட்டு வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழச்சிகளான பொங்கல் விழா
முடிந்த மறுநாள் மாலை 3 மணிக்கு மா, பலா, வாழை, காய், கனிகள் தோரணங்களால்
அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க மங்கள இசை முழங்க
வானவேடிக்கைகளுடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம்
நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கீரமங்கலம் மற்றும் சுற்றவட்டார
கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். திருவிழா
ஏற்பாடுகளை விழாக் கழுவினர் செய்து செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை
கீரமங்கலம் போலிசார் செய்திருந்தனர். அடுத்தடுத்த நாட்களில் தீர்த்தம்,
தெப்ப திருவிழாக்களும் நடக்கிறது.
0 comments