விபத்தின்போது மாயமான 23 பவுன் நகைகள் 5 நாட்களுக்குப் பின்னர் அதே இடத்தில் மீட்பு
ஆலங்குடி அருகே விபத்துக்குள்ளான காரிலிருந்து மாயமான 23 பவுன் நகைகளை, 5 நாட்களுக்குப் பின்னர் அதே இடத்திலிருந்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.
வடகாடு ஊராட்சி பாப்பாமனையைச் சேர்ந்தவர் தமிழ்மாறன். கட்டடப் பொறியாளரான இவர், ஜூலை 23-ம் தேதி இரவு ஆலங்குடியிலிருந்து வடகாட்டுக்கு குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
வடகாடு அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது கார்மோதியது. இதில், கார் பள்ளத்துக்குள் இறங்கியது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காயமடைந்தனர்.
அவ்வழியாக வந்த சிலர் காருக்குள் இருந்தவர்களை மீட்க உதவியுள்ளனர். அப்போதுகாருக்குள் கைப்பையில் வைத்திருந்த நகைகளைக் காணவில்லையாம். இதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தில் தமிழ்மாறன் புகார் அளித்தார்.
இதையடுத்து காரிலும், அப்பகுதியிலும் போலீஸார் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. சந்தேகத்தின்பேரில் ஜூலை 26-ம் தேதி 3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் அவர்களிடமிருந்து நகைகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. விபத்துக்குள்ளான கார் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவலின்பேரில் வடகாடு காவல் உதவி ஆய்வாளர் கலியபெருமாள்,ஊராட்சித் தலைவர் என். கனகராஜ், தமிழ்மாறன் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்த்தபோது, காரின் இருக்கையில் கைப்பையும், அதனுள் அனைத்து நகைகளும் அப்படியே இருந்தன. நகைகளை போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே 3 பேர் சிறையில் இருக்கும் நிலையில், திருடப்பட்டதாகக் கூறப்பட்ட நகைகள் மீண்டும் அதே இடத்தில் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி அருகே விபத்துக்குள்ளான காரிலிருந்து மாயமான 23 பவுன் நகைகளை, 5 நாட்களுக்குப் பின்னர் அதே இடத்திலிருந்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.
வடகாடு ஊராட்சி பாப்பாமனையைச் சேர்ந்தவர் தமிழ்மாறன். கட்டடப் பொறியாளரான இவர், ஜூலை 23-ம் தேதி இரவு ஆலங்குடியிலிருந்து வடகாட்டுக்கு குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
வடகாடு அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது கார்மோதியது. இதில், கார் பள்ளத்துக்குள் இறங்கியது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காயமடைந்தனர்.
அவ்வழியாக வந்த சிலர் காருக்குள் இருந்தவர்களை மீட்க உதவியுள்ளனர். அப்போதுகாருக்குள் கைப்பையில் வைத்திருந்த நகைகளைக் காணவில்லையாம். இதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தில் தமிழ்மாறன் புகார் அளித்தார்.
இதையடுத்து காரிலும், அப்பகுதியிலும் போலீஸார் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. சந்தேகத்தின்பேரில் ஜூலை 26-ம் தேதி 3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் அவர்களிடமிருந்து நகைகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. விபத்துக்குள்ளான கார் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவலின்பேரில் வடகாடு காவல் உதவி ஆய்வாளர் கலியபெருமாள்,ஊராட்சித் தலைவர் என். கனகராஜ், தமிழ்மாறன் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்த்தபோது, காரின் இருக்கையில் கைப்பையும், அதனுள் அனைத்து நகைகளும் அப்படியே இருந்தன. நகைகளை போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே 3 பேர் சிறையில் இருக்கும் நிலையில், திருடப்பட்டதாகக் கூறப்பட்ட நகைகள் மீண்டும் அதே இடத்தில் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments