Lattes News And Images And Video Live

Wednesday 31 July 2013

பிரதமர் வருகை : காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு - கலங்கிய மாஜி ( படங்கள் )

விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை பெல் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக டெல்லியில் இருந்து பாதுகாப்பு அதி காரிகள் முன்னதாக வந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பிரதமர் வருகை தரும் மதுரை சாலையில் தீவிர கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்புகளும், சோதணைகளும் நடந்து வருகிறது.
   இந்த நிலையில் பிரதமர் வருகையின் போது புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் எவ்வளவு பேர்கள் கலந்து கொள்வது, எப்படி வரவேற்பு கொடுப்பது என்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் புஜ்பராஸ் தலைமையில் நடந்தது. அப்போது காங் கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றனர்.
  அப்போது குறுக்கிட்டு பேசிய திருமயம் தொகுதி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம்.,    ’’அப்படி விதிமுறைகளை மீறி நாம் கலந்து கொள்ள முடியாது. அதாவது இந்த பெல் நிறுவனம் நமது மாவட்டத்திற்கு கொண்டு வரவேண்டும். அதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் மாண்புமிகு அமைச்சரிடம் சொல்லி கொண்டு வந்தோம். ஆனால் பெல் நிர்வாகம் நம் மாவட்டத்தில் இருந்து யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை.
   நிலம் கொடுத்தவர்களுக்கு கூட வேலை இல்லை. இதைவிடக் கொடுமை நான் பெல் நிறுவனத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சரிடம் பேசி என்னை மட்டும் அனுமதித்தார்கள். பிரதமர் வந்து இறங்க ஹெலிபேட் அமைக்க இடமின்றி தவித்த போது என்னிடம் வந்தார்கள் இடம் தேர்வு செய்து கொடுத்தேன். ஆனால் இப்போது என்னை அந்த நிறுவனத்திற்குள் விட மறுக்கிறார்கள்.
   நம் மாவட்டத்து இளைஞர்களுக்கும் வேலை கொடுக்கவில்லை. மேலும் இது காங்கிரஸ் கட்சி விழா இல்லை. பெல் நிறுவன விழா அதனால் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள முடியும் என்று பெல் நிர்வாகத்தினர் கூறி விட்டனர். அமைச்சர் ப.சியிடம் பேசி 1500 பேர்கள் கலந்து கொள்ள அனுமதி கேட்டிருக்கிறோம் அதனால் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி உள்ளது.
    இதனால் என் மகனுக்கு கூட வேலை வாங்கி கொடுக்க முடியாதவன் என்று என்னை என் மனைவியே பேசுகிறார். விழா முடிந்ததும் அமைச்சரிடம் சொல்லி தீர்வு காணும் வரை நாம் அமைதி காக்க வேண்டும்’’ என்று தனக்கு நடந்த கொடுமைகளை கொட்டித் தீர்த்துவிட்டார்.
    இதைக் கேட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நிறுவனத்திற்குள் காங்கிரஸ்காரன் உள்ளே போக முடியாது என்றால் எப்படி? என்று வேதனையுடன் சொல்லிக் கொண்டே சென்றனர்.
    இந்த பிரச்சணை காங்கிரஸ் காரர்கள் மத்தியில் பெரும் சலசலப்பாக உள்ளது.






Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
Posts RSSComments RSSBack to top
© 2011 VADAKADU.IN ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0