Lattes News And Images And Video Live

Friday 7 June 2013

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாட்டில் இடியுடன் கூடிய கனமழை

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாட்டில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வங்கிகள், அரசு அலுவலகங்களில் இன்டர்நெட் இயங்காததால் அனைத்து பணிகளும் நேற்று பாதிக்கப்பட்டன. ஆலங்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் இடி, மின்னல் மற்றும் கனமழையால் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஐ.ஓ.பி., வங்கி மற்றும் மின்சார வாரியம், பி.எஸ்.என்.எல்., தாலுகா அலுவலகம் இன்னும்பிற அரசு மற்றும் தனியார் இன்டர்நெட் பயன்படுத்தும் அலுவலகத்தில் நெட் இணைப்பு பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. வங்கி ஏ.டி.எம்., காலையில் சரிவர இயங்கவில்லை. இடி கன மழையால் ஆலங்குடி பகுதியில் இன்டர்நெட் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு பணிகள் முடங்கியதால் பலர் தங்களது வேலைகளை செய்யமுடியாமல் தவித்தனர்.இருப்பினும் ஆலங்குடிபகுதியில் பல நாட்களுக்கு பிறகு பெய்த இடியுடன் கூடிய கனமழையால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலர் மழையில் நனைந்தபடி உற்சாகமாக இருந்தனர்.



Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
Posts RSSComments RSSBack to top
© 2011 VADAKADU.IN ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0